யோசியா, "ஏனென்றால்... நீ உன்னைத் தாழ்த்திக் கொண்டாய்"
ராபின் ஓவன் - டம்பா, FL
யோசியா களத்திற்கு வந்தபோது, வடக்கு ராஜ்ஜியம் (இஸ்ரேல்) அசீரியர்களின் துன்மார்க்கத்திற்காக சிறைபிடிக்கப்பட்டது, அதே காரணத்திற்காக யூதாவின் மீது கர்த்தருடைய கோபம் அதிகமாய் இருந்தது. யோசியாவின் முற்பிதாவாகிய மனாசே, யூதாவில் ஆட்சி செய்த மிக மோசமான, மிகவும் தேவபக்தியற்ற ராஜாவாக இருக்கலாம். அவர் பாகாலுக்கு பலிபீடங்களை எழுப்பினார், ஒரு விக்கிரகத்தோப்புகளை உருவாக்கினார், வானத்தின் சேனைகளுக்கு பலிபீடங்களைக் கட்டினார், கர்த்தருடைய ஆலயத்திற்குள் விக்கிரக வழிபாட்டைக் கொண்டு வந்தார், தெய்வங்களுக்கு மனித பலிகளை அனுமதித்தார், மேலும் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. யோசியாவின் தந்தை ஆமோன், தனது தந்தை மனாசேயின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, கர்த்தருடைய பார்வையில் பொல்லாப்பை செய்தார்.
யோசியாவின் பாரம்பரியம் துன்மார்க்கமும், தேவபக்தியற்ற தன்மையும் நிறைந்ததாக இருந்தது, ஆனாலும், இந்த இளைஞன் தனது பாரம்பரியத்தை மீறி உயர்ந்து, தேசத்தை உண்மையிலேயே சீர்திருத்தி, அவர்களை மீண்டும் கர்த்தரிடம் கொண்டு வந்தான். யூதாவில் ஆட்சி செய்த சிறந்த ராஜா யோசியா என்று சிலர் வாதிடலாம். யோசியா ("யெகோவா உதவுகிறார்") யூதாவின் பதினாறாவது ராஜாவாக இருந்தார், அவர் ராஜாவாகிறபோது எட்டு வயது. யோசியா ராஜாவானபோது "அவர் கர்த்தருக்கு முன்பாகச் செம்மையானதைச் செய்து, வலது இடது பக்கம் திரும்பாமல், தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளிலெல்லாம் நடந்தார்" (2 இராஜாக்கள் 22:2).
II நாளாகமம் 34, 16 வயதில், தனது ஆட்சியின் எட்டாவது ஆண்டில், தனது தந்தை தாவீதின் கடவுளைத் தேடத் தொடங்கினார் என்று நமக்குச் சொல்கிறது. யோசியா கடவுளைத் தேர்ந்தெடுத்தார். கடவுளின் பார்வையில் சரியானதைச் செய்யத் தேர்ந்தெடுத்தார். குடும்பத்திற்கு எதிராகவும், முழு யூதாவிற்கும் எதிராகவும் செல்லத் தேர்ந்தெடுத்தார், மேலும் யூதாவில் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தனது காலத்தின் கலாச்சார தாக்கங்களை நிராகரிக்கத் தேர்ந்தெடுத்தார்.
20 வயதில், தனது ஆட்சியின் பன்னிரண்டாம் ஆண்டில், யூதா, எருசலேம் மற்றும் பழைய வடக்கு ராஜ்ஜியத்தின் சில பகுதிகளை கூட அவர் சுத்திகரிக்கத் தொடங்கினார். பாகாலின் மேடைகள், செதுக்கப்பட்ட சிலைகள் மற்றும் பலிபீடங்களை அவர் அகற்றினார். யோசியா மிகுந்த பலத்துடனும் உறுதியுடனும் தேசத்தைச் சுத்திகரித்தார்,
26 வயதில், தனது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில், யோசியா பாகால், விக்கிரத்தோப்பு மற்றும் வான சேனைகளின் வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட அனைத்துப் பாத்திரங்களையும் தேவாலயத்திலிருந்து சுத்தம் செய்யத் தொடங்கினார், பின்னர், அவர் தேவாலயத்தை பழுதுபார்க்கத் தொடங்கினார். ஆலய வேலையின் போதுதான் ஆசாரியனாகிய இல்க்கியா நியாயப்பிரமாணப் புத்தகத்தைக் கண்டுபிடித்தார், இல்க்கியா அந்தப் புத்தகத்தை சம்பிரதியாகிய சாப்பானிடம் கொடுத்தார், அவர் அதை ராஜாவின் முன்னிலையில் வாசித்தார். ராஜா நியாயப்பிரமாண புத்தகத்தின் வார்த்தைகளை கேட்டபோது தனது வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டார். (II இராஜாக்கள் 22:11). தனது வஸ்திரங்களை கிழித்துக்கொள்வது ஆழ்ந்த துக்கம் மற்றும் மனவருத்தத்தின் வெளிப்புற வெளிப்பாடாகும். இந்தக் கட்டத்தில்தான் யூதா எவ்வளவு பாவமாகவும் பொல்லாததாகவும் மாறிவிட்டது என்பதை யோசியா உணர்ந்தார், கடவுள் அவர்கள் மீது அளித்த பெரும் கோபத்தால் வாடிப்போனார். யோசியா தனது மக்களின் பாவத்தைக் கண்டு வெட்கப்பட்டு, கடவுளின் கோபத்திற்கு பயந்ததால், யோசியா தனக்காகவும், மக்களுக்காகவும், யூதா முழுவதற்காகவும் கர்த்தரிடம் விசாரித்தார்.
கடவுளின் தெய்வீக நியாயத்தீர்ப்பைத் திரும்பப் பெற முடியாது என்பதை உல்தாள் தீர்க்கதரிசி மூலம் ராஜா அறிந்துகொண்டார். ஆனால் II இராஜாக்கள் 22:19-ல், யோசியாவுக்கு கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், "இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக, அவர்கள் பாழும் சாபமுமாவார்கள் என்று சொன்னதை நீ கேட்டபோது உன் இருதயம் இளகி, நீ கர்த்தருக்கு முன்பாக உன்னை தாழ்த்தி, உன் வஸ்திரங்களை கிழித்துக்கொண்டு, எனக்கு முன்பாக அழுதபடியினால் நானும் உன் விண்ணப்பத்தை கேட்டேன்." யோசியாவின் தாழ்மையான இருதயத்தின் காரணமாக, கர்த்தர் அவனுக்கு இரக்கம் காட்டி, யூதாவின் மீதான தனது நியாயத்தீர்ப்பை அவன் மரணத்திற்குப் பிறகு வரை தாமதப்படுத்தினார்.
யோசியா உடன்படிக்கையின் புத்தகத்தை எல்லா மக்களுக்கும் வாசித்து, மக்களை உடன்படிக்கையின்படி நடக்குபடி வழிநடத்தினார். சாமுவேலின் காலத்திலிருந்து, இஸ்ரவேல் அல்லது யூதா ராஜாக்களின் எல்லா நாட்களிலும் கொண்டாடப்படாத பஸ்காவையும் யோசியா மீண்டும் நடத்தினார்.
யோசியாவின் பதிவு "அவருக்கு முன் அவரைப் போன்ற ஒரு ராஜா இருந்ததில்லை, அவர் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் கர்த்தரிடம் திரும்பினார்," என்று கூறுகிறது. "மோசேயின் எல்லா சட்டங்களின்படியும், அவருக்குப் பின் அவனைப் போன்ற யாரும் இல்லை" (II இராஜாக்கள் 23:25). இது உபாகமம் 6:4-6-ஐப் பிரதிபலிக்கிறது, அங்கு மக்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடு, முழு பலத்தோடும், கர்த்தரிடத்தில் அன்புகூறுவதும், இன்று நான் உனக்கு கட்டளை இடுகிற இந்த வார்த்தைகளை உன்னிதத்தில் இருக்கக்கடவது. இயேசு மாற்கு 12:29-ல் இந்தக் கட்டளையை மீண்டும் வலியுறுத்தினார், இது " பிரதான கட்டளை" என்று அடையாளம் காட்டினார்.
கடவுளுக்கு முழுமையாக அர்ப்பணிப்புள்ள இருதயம் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு இந்த இளம் ராஜா இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கடவுளைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும், ஆலயத்தை சுத்தப்படுத்துவதன் மூலமும், புத்தகத்தைப் படிப்பதன் மூலமும் நாம் அவரது முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும்.
கடவுளின் மக்களாக, நாம் கடவுளைத் தேர்ந்தெடுத்து, அவருடைய பார்வையில் சரியானதைச் செய்யத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் பொருள் நாம் நம் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எதிராகச் சென்று, நம் காலத்தின் கலாச்சார செல்வாக்குகளைத் தள்ளிவிட வேண்டும். ஒரு ராஜாவின் செல்வாக்கை நாம் பயன்படுத்தாவிட்டாலும், நம் முழு இருதயத்தோடு கடவுளைத் தேடிச் ஊழியம் செய்ய நாம் தேர்ந்தெடுக்கும் தேர்வு, நம் குடும்பம், நண்பர்கள் மற்றும் நம் சமூகத்தில் உள்ளவர்கள் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
கடவுளின் மக்களாகிய நாம், ஆலயத்தைச் சுத்திகரிக்க வேண்டும் - பரிசுத்த ஆலயம். II கொரிந்தியர் 6:16-ல், நாம் "ஜீவனுள்ள தேவனுடைய ஆலயம்" என்று அழைக்கப்படுகிறோம். நாம் செதுக்கப்பட்ட விக்கிரகத்தை வணங்காவிட்டாலும், நம் வாழ்வில் பரவியுள்ள பல விஷயங்கள் அகற்றப்பட வேண்டும். கொலோசெயர் 3:5-9-ல், பவுல் ஆகையால் விபச்சாரம், அசுத்தம், மோகம், துர் இச்சை, விக்கிரக ஆராதனையான பொருளாசை, ஆகிய இவைகளை பூமியில் உண்டு பண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்து போடுங்கள்
இவைகளின் பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் மேல் தேவகோபாகினை வரும்.
நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே சஞ்சரித்த போது அவைகளை செய்து கொண்டுவந்தீர்கள்.
இப்பொழுதோ கோபமும், மூர்க்கமும், பொறாமையும, உங்கள் வாயில் பிறக்கலாக தூஷணமும் வம்பு வார்த்தைகளும் ஆகிய இவைகளை விட்டு விடுங்கள் (கொலோசெயர் 3:12-14) ஆகையால் நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தரும், பிரியருமாய் உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மன தாழ்மையிலும் சாந்தத்தையும், நீடிய பொறுமையும், தரித்துக்கொண்டு
ஒருவரை ஒருவர் தாங்கி ஒருவர் பேரில் ஒருவருக்கு குறைபாடு உண்டானால் கிறிஸ்து உங்களுக்கு மன்னித்தது போல ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
இவை எல்லாவற்றின் மேலும் பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பை தரித்துக்கொள்ளுங்கள்.
தேவனுடைய பிள்ளைகளாக, நாம் புத்தகத்தைப் படிக்க வேண்டும், மேலும் புத்தகத்தை அதிகமாகப் படிக்க வேண்டும். அதை மிகைப்படுத்திக் கூற முடியாது என்று நான் நம்புகிறேன். கடவுளுடைய வார்த்தையில் நாம் நேரத்தைச் செலவிடாவிட்டால் அது நம் இருதயத்தில் நிலைத்திருக்க முடியாது. புத்தகத்தைப் படிப்பதன் மூலம் மட்டுமே கடவுளின் கருணையையும் கடுமையையும் நாம் அடையாளம் காண்போம் (ரோமர்.11-22. யோசியா செய்தது போல நாமும் தேவனுடைய வார்த்தையை படிக்க வேண்டும். (யாக்கோபு 4:8)ன் படி தேவனிடத்தில் சேருங்கள் அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். ஆகவே நாம் தேவனுடைய வார்த்தைகளை படித்து மற்றவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிப்போம். மாற்கு 16:15